2 குழந்தைகளை வெட்டிக் கொலை செய்தது ஏன்? - தந்தை பரபரப்பு வாக்குமூலம்!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இரண்டு குழந்தைகளை வெட்டிக் கொலை செய்தது ஏன் என தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அசோக் குமார்-தவமணி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு அருள் பிரகாஷ்(5), வித்ய தாரணி(13), அருள்குமாரி ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். தவமணிக்கும், அசோக் குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் குடும்ப தகராறு ஏற்பட்ட நிலையில், இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் அசோக் குமார், மனைவி உட்பட 3 குழந்தைகளை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் குழந்தைகள் அருள் பிரகாஷ் (5), வித்ய தாரணி (13) உயிரிழந்துள்ள நிலையில், படுகாயம் அடைந்த மனைவி தவமணி, குழந்தை அருள்குமாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இரண்டு குழந்தைகள் வெட்டிக் கொலை செய்தது ஏன் என தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக அசோக் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவி மற்றும் 3 குழந்தைகளை வெட்டி சாய்த்து விட்டு தந்தை நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடிய மனைவி, மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


