மூதாட்டியின் முகத்தில் மலத்தை பூசிய நபர்... சேலத்தில் பரபரப்பு...

 
மூதாட்டியின் முகத்தில் மலத்தை பூசிய நபர்...  சேலத்தில் பரபரப்பு...

காடையாம்பட்டி அருகே 90 வயது மூதாட்டியின் முகத்தில்  மனித மலத்தை  பூசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள கொத்தப்புளியானுர் கிராமத்தைச் சேர்ந்தவர்  90 வயது மூதாட்டியான பாப்பாயி என்கிற நாகம்மாள். இவருக்கும்  அதே பகுதியில் வசித்து வரும்  கிருஷ்ணன் என்பவர்,  தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மூதாட்டி இடம் அடிக்கடி சண்டையிடுவதையும்,  ஆபாசமான வார்த்தைகளை கூறி திட்டுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் மூதாட்டி நாகம்மாள் வீட்டில், படுத்திருந்தபோது அவ்வழியாக சென்ற கிருஷ்ணன் மூதாட்டியை திட்டிக்கொண்டே சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த மூதாட்டி பாப்பாயியும் கிருஷ்ணனை திட்டியிருக்கிறார்.

மூதாட்டியின் முகத்தில் மலத்தை பூசிய நபர்...  சேலத்தில் பரபரப்பு...

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன், திட்டிக்கொண்டே  மனித மலத்தை எடுத்து மூதாட்டியின் முகத்தில் பூசி இருக்கிறார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம்போட்டு கத்தவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர்.  பின்னர் அவர்கள்  தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  விரைந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியின் மீது மனிதக் கழிவை  பூசிய  கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.