சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு - 2 பேரிடம் விசாரணை

 
tn

சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக கருப்பூர் போலீசில் ஆஜரான 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியார் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா

சேலம் பெரியார் பல்கலைக்கழக எஸ்சி/எஸ்டி  பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட  2.66 கோடி நிதியில் ஊழல் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட  பல்கலைக்கழக பட்டியலின மாணவர்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மோசடி, கூட்டு சதி, கொலை மிரட்டல், எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டப்பிரிவு ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், நிபந்தனை ஜாமினில் தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதனிடையே பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மற்றும் கணினி அறிவியல் துறை துணை பேராசிரியர் சதீஷ் ஆகியோர் தொடர்ந்து தலைமுறைவாக உள்ளனர். காவல்துறையினர் துணை வேந்தர் மற்றும் பதிவாளர் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து தொடர் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் எஸ்சி எஸ்டி பட்டியல் இன மாணவர்களுக்கு தீனதயால் உபாத்தியாயத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 2.66 கோடி நிதியில் ஊழல் நடந்திருப்பதாக புதிதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெரியார் பல்கலைக்கழக கழகத்தில் பயிலும்  எஸ்சி/எஸ்டி  பட்டியலின மாணவர்கள் சிலர்  சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். பட்டியலின  மாணவர்களுக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதியை தங்களுக்கு வழங்காமல் முறைகேடு செய்ததாக மனுவில் தெரிவித்துள்ளனர். 

tn

இந்நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக கருப்பூர் காவல்நிலையத்தில் பேராசிரியர்கள் நந்தீஸ்வரன், நரேஷ்குமார், ஜெயக்குமார் ஆகியோர் ஆஜராகியுள்ளனர். சம்மன் அனுப்பப்பட்டு  5 பேரும் ஆஜரான நிலையில் உதவி காவல் ஆணையர் நிலவழகன் விசாரணை நடத்தி வருகின்றனர்.