"மனைவிக்காக கட்சியை அடமானம் வைத்துவிட்டார் சரத்குமார்" - ஆர்.பி. உதயகுமார் தாக்கு!!

 
nh


மனைவிக்காக கட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டார்  சரத்குமார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

rb udhayakumar

 விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளரும்,  விஜயகாந்த் மகனுமான விஜய பிரபாகரனை ஆதரித்து திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட செங்கானூரணி, கின்னிமங்கலம் , புளியங்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பரப்பரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் , விஜய பிரபாகரன் நினைத்தால் நாற்பது தொகுதியில் எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம். அவர் வெற்றி பெறுவார் / அவரது தந்தை விஜயகாந்த் அந்தளவுக்கு நற்பெயரை பெற்றுள்ளார்.  தந்தை பிறந்த ஊர் என்பதால் அவர் விரும்பி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார் . மக்களை நம்பி அவர் போட்டியிடுகிறார்.

th

 10 ஆண்டு காலம் மாணிக்கம் தாகூருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தீர்கள். அவர் எதையும் செய்யவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மக்களவையில் குரல் கொடுக்காமல் டீ பக்கோடாவை சாப்பிட்டவர். அவரை திருப்பி நீங்கள் தேர்ந்தெடுத்தால் வட மாநில எம்.பி.க்கள் போல் மக்களவையில் சென்று டீ,  பக்கோடா மட்டும்தான் சாப்பிடுவார்.    பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.  மனைவி போட்டியிடுவதற்காக,  ஒரு சீட்டுக்காக தனது கட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்தவர் தான் சரத்குமார் . அவரை நம்பி இந்த தொகுதி நீங்கள் ஒப்படைத்தால் அது சரியாக இருக்காது.  இந்த தொகுதியை நீங்கள் ஒப்படைக்கவும் முடியாது.  அதனால் விஜய பிரபாகனை நம்பி ஒப்படையுங்கள். அவர் உங்களையும்,  உங்கள் தொகுதியையும் விஜயமாக வைத்திருப்பார். என்றார்.