எம்.ஜி.ஆர் 105வது பிறந்தநாள் : அவரது சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை...
எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்தநாளையொட்டி தி.நகரில் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 105 அவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.
இதேபோல் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்ஜிஆர் - ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். எம்ஜிஆரின் 105- வது பிறந்தநாளையொட்டி அங்குள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.