ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா : முக்கிய தகவல் இதோ!!

 
admk

வருகின்ற 17 ஆம் தேதி அதிமுகவின் 50 ஆண்டு தொடக்க விழாவாக பொன்விழா கொண்டாடப்படுகிறது. இதனால் பேரூராட்சி ,ஊராட்சி ,மாவட்டம் , வட்டம் , பகுதி என அனைத்து இடங்களிலும் அதிமுக கொடி கம்பத்தில் அக்கட்சியின் கொடியேற்றி,  இனிப்புகள் வழங்கப்பட வேண்டும் என தலைமை கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

jaya sasi

இந்த சூழலில் சசிகலா வருகின்ற 17 ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது இதுவே முதல்முறை.சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற சசிகலா 4 ஆண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார்.  அதன் பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்தார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியதையடுத்து தனது முடிவிலிருந்து பின்வாங்கிய அவர் அக்கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் ,தொண்டர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசி வருகிறார். இருப்பினும் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

sasikla

இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு , சசிகலா முதல் முறையாக செல்ல உள்ளார்.   இதைத் தொடர்ந்து சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கும் சசிகலா சென்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.