அமித் ஷாவை கண்டித்து சாத்தனூர் நகர திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!
சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம் .
சாத்தனூர் நகர திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
’ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான இரு மசோதாக்களும் மக்களவையில் நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மக்களவையில் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவாதத்தின் போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஆர் அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என பேசுகிறார்கள். அதற்கு பதிலாக கடவுளின் பெயரை சொன்னால் கூட புன்னியம் கிடைக்கும் என கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களைக் கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம் .சாத்தனூர் நகர திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


