கடலூரில் பெரும் பரபரப்பு...பட்டப் பகலில் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி படுகொலை

 
Cuddalore

கடலூர் ஸ்ரீமுஷ்ணம் பேருந்து நிலையத்தில்  பள்ளி செல்ல காத்திருந்த மாணவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேருந்து நிலையத்தில் பள்ளி, மற்றுக் கல்லூரிகளுக்கு செல்வதற்காக ஏராளமான மாணவர்கள் பேருந்துக்காக காத்து நின்றனர். இதேபோல் புளியங்குடியை சேர்ந்த ஜீவா என்ற மாணவ பள்ளிக்கு செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்தார். இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் ஜீவாவுக்கும், மற்றொரு நபருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அந்த நபர் ஜீவாவை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்ட அங்கிருந்து தப்பிச் சென்றார். மின்வாரியத்தில் பணிபுரியும் ஆனந்த் என்பவர் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பேருந்து நிலையத்தில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஆனந்த், ஜீவாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. கத்தியால் குத்தப்பட்ட ஜீவா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அவரது  உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.