"முன்கூட்டியே பள்ளிகளை திறக்கக் கூடாது" - அமைச்சர் அன்பில் மகேஷ்

 
school

பள்ளிகளை முன்கூட்டியே திறக்க கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

school

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரையிலான மாணவர்களுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும்,  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால் தமிழ்நாட்டில் நிலவிவரும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.  இதன் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

School Education

இந்நிலையில் சென்னையில் ஒரு சில தனியார் பள்ளிகள் இன்று பள்ளிகளை திறந்து மாணவர்களை பள்ளிக்கு வர அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் ஜூன் 7ம் தேதிக்கு முன்பாக தனியார் பள்ளிகள் திறக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.