நாளை (வியாழக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

 
1 1

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நேற்றும், இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழை நீர் வெளியேற்றம் மற்றும் வெள்ள பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மாநகர காவல்துறையினரும் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் சென்னை, திருவள்ளூரில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கனமழையை முன்னிட்டு சென்னை, மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (04.12.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக, சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (04.12.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.