இறையன்பு , சைலேந்திரபாபு இருவருக்கும் சீமான் பாராட்டு!!
முனைவர் இறையன்பு , சைலேந்திரபாபு இருவருக்கும் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக திறம்படச் செயலாற்றி பணி நிறைவுபெறும் ஐயா இறையன்பு அவர்களுக்கும், காவல்துறை தலைமை இயக்குநராக திறம்படச் செயலாற்றி பணி நிறைவுபெறும் ஐயா சைலேந்திரபாபு அவர்களுக்கும் எனது அன்பு நிறைந்த பாராட்டுகள்.
தமிழ்நாடு அரச நிர்வாகத்தின் உச்சப் பதவிகளில் ஒரேகாலத்தில் இரண்டு தமிழர்கள் நேர்மையுடன், பலருக்கு முன்மாதிரியாக பணியாற்றினர் என்பதே உலகத்தமிழர்கள் பெருமைகொள்ள வேண்டிய வரலாற்று பெரும்பதிவாகும்.
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக திறம்படச் செயலாற்றி பணி நிறைவுபெறும் ஐயா #இறையன்பு அவர்களுக்கும்,
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) July 1, 2023
காவல்துறை தலைமை இயக்குநராக திறம்படச் செயலாற்றி பணி நிறைவுபெறும் ஐயா #சைலேந்திரபாபு அவர்களுக்கும் எனது அன்பு நிறைந்த பாராட்டுகள்.
(1/4) pic.twitter.com/ZSrPkyMbiG
தங்களின் நீண்ட பணிக்காலத்தில் அரச நிர்வாகத்தை சிறப்புற இயங்கச் செய்ய அளப்பரிய அறிவையும், ஆற்றலையும் அர்ப்பணித்த இருபெரும் தமிழர்களுக்கும் எனது நன்றியும், வாழ்த்துகளும்! அரசின் இரு கண்களான நிர்வாகம், காவல் இரண்டிலும் ஒளிவீசும் தமிழ்ப்பார்வையுடன் உணர்வுப்பூர்வமாக அரசப்பணியாற்றிய தங்களின் சேவையை தமிழினம் என்றென்றும் நினைவுகூரும்! " என்று பதிவிட்டுள்ளார்.