சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோம் - சீமான்

 
seeman

சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய சீமான், முன்னுரிமை அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் நாதகவுக்கு தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 

 சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பரிந்துரை செய்வதாக கூறினார். கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத பட்சத்தில் வேறு சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.  சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட போகிறோம் என கூறினார்.