திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம் - சீமான் அறிவிப்பு

 
seeman

விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம் உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்ளை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும். ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும். 
அண்ணாமலை பேச வேண்டியதெல்லம் ஆளுநர் பேசி விடுவதால் அண்ணாமலைக்கு குழப்பம். அதனால் தான் ஆளுநர் அரசியல் பேச கூடாது என்கிறார். யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். 

மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ய நீங்கள் யார்? ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது மக்களாட்சிக்கு விரோதமானது. விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம். அதனால் தான் விஜய் படத்தில் மது குடிக்கும் காட்சியை அரசியல் ஆக்குகின்றனர். இதற்கு முன்பாக, மது குடிக்கும் காட்சிகளில் விஜய் நடித்தது இல்லையா?. இவ்வாறு கூறினார்.