பொள்ளாச்சி கோழிப்பண்ணையில் ரூ.32 கோடி பறிமுதல்!!

 
tn

பொள்ளாச்சியில் தனியார் கோழிப்பண்ணை அலுவலகம், உரிமையாளர்களின் வீடுகளில் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் MBS கோழிதீவனம், கோழிப்பண்ணைகள்  நடத்திவரும் தொழிலதிபர்கள் அருள் முருகன், சரவண முருகன் ஆகியோரது வீடு, அலுவலகங்களில் ₹32 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

tn

பொள்ளாச்சியில் MBS கோழி பண்ணையில் இருந்து ரூ.32 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று இரவு முதல் ஐ.டி.அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் இன்று 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

tn

அத்துடன் நெல்லையில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 2 தொழிலதிபர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.