போருக்கு தயாராவது போல் மக்களவை தேர்தலுக்கு அதிமுக தயாராக உள்ளது - செல்லூர் ராஜூ பேட்டி

 
sellur raju

தேர்தல் கூட்டணியில் இருக்கும் வரை தான் நண்பர்கள், வெளியேறி விட்டால் எதிரிகள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: போருக்கு தயாராவது போல் மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக தயாராக உள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சர்ச்சை பேச்சுக்களால் இஸ்லாமிய மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. திமுக எம்.பி.க்களை விட வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற போகும் அதிமுக உறுப்பினர்கள் தான் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பார்கள். தேர்தல் கூட்டணியில் இருக்கும் வரை தான் நண்பர்கள், வெளியேறி விட்டால் எதிரிகள். 

அதிமுக கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். போருக்கு தயாராவது போல் மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக தயாராக உள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சர்ச்சை பேச்சுக்களால் இஸ்லாமிய மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன என கூறினார்.