பெரியாரை அதிமுக ஏற்கவில்லையா? சீமானை கண்டிக்காதது ஏன்?- செல்வப்பெருந்தகை

 
 சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கனும் - செல்வப்பெருந்தகை  சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கனும் - செல்வப்பெருந்தகை

தந்தை பெரியாரை இழிவுப்படுத்திய சீமான் ஈரோடு இடைத்தேர்தலில் எப்படி மக்களை சந்தித்து வாக்கு கேட்பார்? என  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.


தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தி.நகர் பகுதியில்  மாவட்டத் தலைவர்  முத்தழகன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில்  மாநில தலைவர் செல்வப்பெருந்தகை  பங்கேற்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார். உடன் மாநில நிர்வாகிகள் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு சந்தித்த  செல்வப்பெருந்தகை, “தமிழ் தான் மூத்த மொழி தமிழர்கள் தான் மூத்த குடி என்று ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தார்கள். ஆனால் சமஸ்கிருதம் தான் மூத்த மொழி, சிறந்த மொழி என்று  சொன்னவர்கள் இன்று தமிழ் மொழியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கீழடி பொருநை உள்ளிட்டவை ஆய்வு அடிப்படையில் உலகமே ஏற்றுக் கொள்ளும் வகையில் உறுதி செய்து இருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழி பெருமை எல்லாம் பேசி வருகிறார்.  ஆனால் தமிழ்நாட்டின் உரிமை, நிதி கொடுக்க மறுப்பாத தெரிவித்தார். மத்திய அரசின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. உடனடியாக தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதி பங்களிப்பை விடுவிக்க வேண்டும். மேலும் பள்ளி கல்வித் துறையைக்கு வர வேண்டிய நிதியும் மறுக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியாரை இழிவுப்படுத்திய சீமான் ஈரோடு இடைத்தேர்தலில் எப்படி மக்களை சந்தித்து வாக்கு கேட்பார்? இதற்கான சரியான பதிலடியை மக்கள் கொடுப்பார்கள். சீமான், பெரியாரை விமர்சித்ததை அதிமுக ஏன் கண்டிக்கவில்லை. பெரியாரை அதிமுக ஏற்கவில்லையா? சீமான் மீது ஏன் SOFTஆக உள்ளார்கள்?

ஒரு தேர்தல், ஒரு மொழி, ஒரு கலாச்சாரத்தை சட்டமன்றத்தில் திணிக்க வேண்டும் என ஆளுநர் எண்ணுகிறார். இந்த திணிப்பெல்லாம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் எடுபடாது. நமக்கென்று ஒரு வரலாறு, நடைமுறை இருக்கிறது. இந்த நடைமுறையை எப்படி மாற்ற முடியும்? மாற்றுவதற்கு வாய்ப்பில்லை. வம்பு பண்ண வேண்டும் என்று ஆணவத்தோடும் திமிரோடும் ஆளுநர் செயல்படுகிறார்.” என்று தெரிவித்தார்.