அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து அவமரியாதை - செல்வப்பெருந்தகை கண்டனம்!

 
selvaperunthagai selvaperunthagai

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் ஊற்றி, தீவைத்து, அவரின் சிலையை அவமதிப்பு செய்த சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் ஊற்றி, தீவைத்து, அவரின் சிலையை அவமதிப்பு செய்த செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். கடந்த காலத்தில் தலைவர்கள் சிலை அவமதிப்பு சம்பவம் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. இதை ஆரம்பத்திலே தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தைப் பயன்படுத்தி தக்க தண்டனை பெற்றுத் தரவேண்டும். இத்தண்டனையானது தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சிதைக்க முயல்வோருக்கு மறக்க முடியாத பாடமாக அமைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.