செம்பரம்பாக்கம் - நீர் திறப்பு 3,000 கனஅடியாக உயர்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு 3 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் டிசம்பர் 4ஆம் தேதியன்று கரையை கடக்கும் என்றும் இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கனவே கன மழை காரணமாக நேற்று 6 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது. 1500 கன அடி அளவில் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த அளவு 3000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 2800 கன அடி நீர்வரத்து இருந்து வரும் நிலையில் மொத்த உயரம் 24 அடியில் 20.74 அடியாக உள்ளது. 3600 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2792 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.