சபாநாயகர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புகிறோம் - செங்கோட்டையன் பேட்டி

 
பள்ளிகளில் ஏப்ரல் மாதத்துக்கு முன் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது : அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் கூறியிருக்கிறார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சந்தித்து பேசினர். எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் நீடித்து வரும் நிலையில், இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை சபாநாயகரிடம் மனு அளித்தும் அவரது இருக்கை மாற்றப்படவில்லை. இந்த நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக முறையிட தலைமைச் செயலகத்துக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர்.  சபாநாயகரை சந்தித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக மனு அளித்தனர். ஓ. பன்னீர்செல்வம், வைத்தி லிங்கம் மனோஜ் பாண்டியன் இருக்கைகளை மாற்றி அமைக்க கோரிக்கை வைத்தனர்.  

tn

இதனை தொடர்ந்து தலைமை செயலகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை வழங்கப்பட வேண்டும் என 3வது முறையாக கோரிக்கை வைத்துள்ளோம். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் கூறியிருக்கிறார். சபாநாயகர் கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என கூறினார்.