செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மார்ச் 04ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

 
senthil balaji senthil balaji

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மார்ச் 04ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 20 முறை  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில்  செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21வது முறையாக நீட்டிக்கப்பட்டது.

court


 
இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மார்ச் 04ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மார்ச் 4ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் முகாந்திரமில்லை என செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்து இருந்தார்.