#BREAKING "கைது என்றவுடன் செந்தில் பாலாஜி நாடகமாடுகிறார்" - ஈபிஎஸ் பரபரப்பு பேட்டி!!
கைது என்றவுடன் செந்தில் பாலாஜி நாடகமாடுகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த நிலையில், "தமிழகத்தில் டெண்டர் இல்லாமல் 2000 மதுபான பார்கள் நடத்தப்பட்டு வருகிறது; உரிமம் இல்லாத பார்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தன் கடமையை செய்துள்ளது. நான்காண்டுகளுக்கு முன்பே செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்;
மனித உரிமை குறித்து பேசுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. கொள்ளையடிக்கப்பட்டுள்ள பணத்தைப் பற்றி எங்கே செந்தில் பாலாஜி சொல்லி விடுவாரோ என்பதற்காக தான் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்று அவரைப் பார்த்து உள்ளார் முதல்வர் ஸ்டாலின். கைது என்றவுடன் செந்தில் பாலாஜி நாடகமாடுகிறார்.அமைச்சர் செந்தில் பாலாஜி தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.