செந்தில் பாலாஜி நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு

 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - ஐகோர்ட்டை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்.. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - ஐகோர்ட்டை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்..

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரிலோ அல்லது காணொளி மூலமாகவே ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கு: ரிக்வஸ்ட் செய்தும் கேக்கல.. வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள்.. 

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நாளை அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளது. நாளை செந்தில் பாலாஜியை நேரிலோ அல்லது காணொளி மூலமாகவே ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை என்றால் காணொலி மூலம் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என நீதிபதி அல்லி கூறியுள்ளார்.