15ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு

 
senthil balaji

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

senthil balaji

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை  சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, மற்றும் ஆவணங்களை அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர். ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்  14வது முறையாக நீட்டிக்கப்பட்டது.

senthil balaji

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜன.22 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமின் கோரிய மனு மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது. இதன் மூலம் 15ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.