BREAKING "செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர தடையில்லை" - உச்ச நீதிமன்றம்

 
rn

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

senthil balaji

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை  சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. அதேசமயம் புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்  14வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே  சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுக்கலாம். இது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை  இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

tn

இந்நிலையில் செந்தில் பாலாஜியை இலக்கா இல்லாத அமைச்சராக தொடர எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த  உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில்  சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது. எனவே இந்த விவகாரத்தில் தலையிட தேவையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.