தொடர் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி 27 ஆண்டுகளுப்பின் கைது! கோவை காவல் நிலையங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..
கோவையில் 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதனையொட்டி கோவையில் அனைத்து காவலர்களும் காவல் நிலையங்களில் பணியில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு பா.ஜ.க தலைவர் அத்வானி வந்தபோது, அல்உம்மா பயங்கரவாத அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி தாக்குதல் நடத்தினர். இதில் 58 பேர் உயிரிழந்தனர், 150 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததனர். தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, சிலருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, பைப் வெடிகுண்டு பொருத்திய முக்கிய குற்றவாளியான டெய்லர் ராஜா என்பவர் தலைமறைவானார். கடந்த 28 ஆண்டுகளாக தலைமறைவாக பதுங்கி இருந்த நிலையில், இன்று சாதிக் ராஜா (எ) டெய்லர் ராஜாவை சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். பலத்த பாதுகாப்புடன் அவரை கோவைக்கு அழைத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும், காவலர்கள் பணியில் இருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


