காவிரி ஆற்றில் கழிவு நீர் : கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதிய தலைமை செயலாளர் இறையன்பு..

 
 இறையன்பு

காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.  

அண்மைக்காலமாக காவிரி ஆற்றில் கழிவு நீர் கலந்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தது. இதனைத்தொடர்ந்து  தலைமைச் செயலாளர் இறையன்பு, கர்நாடக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.   அதில், காவிரியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என கர்நாடக அரசை வலியுறுத்தியுள்ளார். கர்நாடகாவில் இருந்து முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராக இருப்பதாக புகார் எழுந்துள்ளதாகவும்  பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி ஆறு
 
இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள இறையன்பு,  மேலும், காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுவதாக கூறியுள்ளார்.  மேலும், இவ்வாறு முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது என்றார். எனவே, காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும்  கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டுள்ளார்.