விஜயகாந்த் மறைவையொட்டி சீர்காழியில் கடையடைப்பு

 
கடையடைப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கும் வகையில் சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் இன்று மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று  காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ளஅவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக, விஜயகாந்தின் உடல் தற்போது தீவுத்திடலில்  வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணியளவில் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு செல்கிறது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  காலை 6 முதல் மாலை  வரை கடையடைப்பு செய்து தங்கள் இரங்கலை வெளிப்படுத்தி உள்ளனர். சீர்காழி,கொள்ளிடம்,வைத்தீஸ்வரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.