ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும் - சினேகன் பரபரப்பு கருத்து

 
amir

பருத்திவீரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக கவிஞர் சினேகன் கருத்து தெரிவித்துள்ளார். 

பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வைத்த குற்றச்சாட்டுகள் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக திரைபிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கணி, பொன்வன்னன் உள்ளிட்ட பலரும் இயக்குநர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், பருத்திவீர விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு கவிஞர் சினேகன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சினேகன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி  எவருக்கும் இல்லை.பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு  அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான்  தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.