ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட விவகாரம் - மோப்ப நாய் வரவழைப்பு

 
train

ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள் இருந்த விவகார தொடார்பாக கல் வைத்த மர்ம நபர்களை கண்டறிய சென்னையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தது. பச்சகுப்பம் ரயில் நிலையம் அருகே உள்ள வீரவர் கோவில் என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தில் பெரிய அளவிளான கான்கிரீட் கற்கள் மற்றும் கருங்கற்கள் தண்டவாளத்தில் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது.  ரயில் அதிவேகத்தில் அந்த கற்கள் மீது ஏறிய நிலையில், அதில் இருந்த சிமெண்ட் கற்கள் நொறுங்கியதோடு, கறுங்கற்கள் தூக்கி வீசப்பட்டது.  இதனால் பயங்கர சத்தம் கேட்ட நிலையில். ரெயிலில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் கண் விழித்தனர். இதனையடுத்து பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் காவேரி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு ஓட்டுநர் தகவல் தெரிவித்தார். இதன் காரணமாக 15 நிமிடம் காலதாமதமாக காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட இடத்திற்கு ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து தண்டவாளத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை பார்வையிட்டனர்.  

train

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள் இருந்த விவகார தொடார்பாக கல் வைத்த மர்ம நபர்களை கண்டறிய சென்னையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஜான்சி என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு  செய்து வருகின்றனர். இதேபோல் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.