இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது - ஈபிஎஸ்

 
eps

வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

EPS

மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் , “இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது; அதிமுக சின்னத்தை முடக்குமாறு முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.

EPS

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று, அதிமுகவின் குரல் நாடாளுமன்றத்தில் நிச்சயம் ஒலிக்கும்; வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும்; மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு அதிமுக கூட்டணி முடிவாகும்; பிரதமர் வேட்பாளர் யார் என்பது தற்போது அவசியமில்லை. திமுக கூட்டணியில் இருந்து எத்தனைக் கட்சிகள் வெளியேறும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்; ஜனநாயக நாட்டில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளலாம்  என்றார்.