சி.பா. ஆதித்தனார் பிறந்த நாள் - ஈபிஎஸ், ஓபிஎஸ் ட்வீட்

 
tn

சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளான இன்று  அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

tn

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மொழி, தமிழினம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக தன் இறுதி மூச்சு வரை பாடுபட்ட திரு. சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘தினத்தந்தி’ நாளிதழ் மூலம் பாமரனையும் படிக்கத் தூண்டிய அவரது சேவை மகத்தானது.என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில் , தந்தை பெரியாரின்  கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, தொலைநோக்கு சிந்தனைகளால் அச்சு ஊடக உலகில் பல்வேறு மாற்றங்களை  ஏற்படுத்திய தமிழ் இதழியல் முன்னோடியான #தினத்தந்தி நாளிதழை தொடங்கி, தமிழ் இதழியல் உலகில் நீங்கா இடம் பிடித்து முடிசூடா மன்னராகத் திகழ்ந்த 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார்  அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழையும் இதழியல், அரசியல், சமூகப் பணிகள் வாயிலாக தமிழர்களுக்கு அவர் ஆற்றிய சேவையையும் போற்றி வணங்குகிறேன்.என்று பதிவிட்டுள்ளார்.