தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் 119வது பிறந்தநாள் - சசிகலா ட்வீட்

 
sasikala

தமிழர் தந்தை திரு.சி.பா ஆதித்தனார் அவர்களின் 119வது பிறந்தநாளில் அவர்தம் நினைவை போற்றுவோம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

tn

இதுத்தொடர்பாக சசிகலா தனது சமூகவலைத்தள பக்கத்தில், "தமிழில் எளிய நடையில் நாளிதழுக்குரிய மொழிநடையை வடிவமைத்து, வரையறை செய்து, பாமரர்களும் நாட்டு நடப்புகளை எளிதாக அறிந்திடும் வகையில், உண்மை செய்திகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவரும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான தமிழர் தந்தை திரு.சி.பா ஆதித்தனார் அவர்களின் 119வது பிறந்தநாளில் அவர்தம் நினைவை போற்றுவோம்.


தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்கள் தமிழுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆற்றிய அரும்பணிகளையும், தன்னலமற்ற சேவைகளையும் எந்நாளும் போற்றிடுவோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.