சபாநாயகர் தனது மரபை மீறி செயல்படுகிறார் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!!
சபாநாயகர் மரபை கடைபிடிக்கவில்லை என்று ஈபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பேரவையில் இருந்து வெளியேற்றத்திற்கு பின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் உட்பட 3 பேர் நீக்கப்பட்டது குறித்து 10 முறை கடிதம் கொடுத்துள்ளோம். நாங்கள் வைத்த கோரிக்கைகளை சபாநாயகர் நிராகரிக்கிறார், மரபை கடைபிடிக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் அருகில் தான், துணை தலைவர் அமர வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் நகலை வழங்கிய பிறகும், சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை.ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியது செல்லும் என்று நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது. என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் , சபாநாயகர் தனது மரபை மீறி செயல்படுகிறார். புனிதமான இருக்கையில் உள்ள சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் மக்கள் பிரச்னைகளுக்கு அமைச்சர்கள் பதில் தரும் முன்பே சபாநாயகர் பேசிவிடுகிறார் என்று கூறினார்.