இலங்கை கடற்படை அட்டூழியம்.. ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு..

 
இலங்கை கடற்படை அட்டூழியம்.. ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு..   இலங்கை கடற்படை அட்டூழியம்.. ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு..  


இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில்,  ராமேஸ்வரம் மீனவர்களின்  விசைப்படகு கடலின் மூழ்கி விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து  இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். இலங்கை கடற்படையினரை கண்டதும் மீனவர்கள்  தங்களது  படகுகளை கரைநோக்கி திருப்பியுள்ளனர். அப்போதும் விடாமல் அவர்களை துரத்தி வந்த இலங்கை கடற்படையினர் தங்களது படகை ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு மீது மோதியுள்ளனர். இதில் மீனவர்கள் சென்ற படகு முழுமையாக கடலில் மூழ்கி சேதமடைந்துள்ளது. 

இலங்கை கடற்படை

இதனையடுத்து அந்தப் படகில் இருந்த மீனவர்கள் மலைச்சாமி, முத்து முனியாண்டி, மூக்கையா, ராமச்சந்திரன் ஆகிய 4 மீனவர்களும் கடலில் மாயமாகினர்.  மீனவர்கள் குறித்த தகவல் தெரியாததால், சக மீனவர்கள் மீனவளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.  இந்நிலையில்  கடலில் மூழ்கி மலைச்சாமி என்கிற மீனவர் உயிரிழந்துள்ளார். மேலும், படகு மூழ்கியதில் காயமடைந்த 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு யாழ்ப்பாணம் மருத்துமனையில் அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மற்றொரு மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.