நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - மீன்கள், வலைகள் கொள்ளை

 
fishermen

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி அவர்களின் வலைகள் மற்றும் மீன்களை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம். அவ்வாறு பீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வபோது கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருசில நேரங்களில் மீனவர்களை கொடூர ஆயுதங்களால் அடித்து விரட்டியடிப்பதோடு, அவர்களது வலைகள் மற்றும் மீன்களை பறித்து சென்றுவிடுவார்கள். இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வபோது தமிழக மீனவர்களை தாக்கி மீன்களை பறித்துச் சென்றுவிடுவார்கள். 

மீனவர்கள்

இந்த நிலையில், நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த செருதூர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள வலை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  மீன்களை தர மறுத்த 4 மீனவர்கள் மீது இரும்பு பைப்பால் தாக்குதல்  நடத்தியுள்ளனர். காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.