தமிழக மீனவர்கள் 9 பேரை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

 
fisher

நாகை, கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

fisher

ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், தங்க சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்கொள்ளையர்கள் கடலில் தள்ளி சித்திரவதை செய்ததாக நாகை மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 9 மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

fishermen

கடந்த வாரம் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி மூன்று லட்சம் மதிப்புள்ள வலை, ஜிபிஎஸ் கருவி உட்பட பல்வேறு உபகரணங்களை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.