கோவில்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து : உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் - முதல்வர் அறிவிப்பு..

 
ஸ்டாலின்


கோவில்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கோவில்பட்டி துறையூரில் பிரபாகர் என்பவருக்குச் சொந்தமான பாட்டாசு ஆலையில் நேற்று  பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. 45 கட்டடங்கள் உள்ள ஆலையில், ஒரு கட்டடத்தில் ரசாயனங்களைக் கொண்டு ஃபேன்சி வெடி தயாரிப்பதற்காக் குழாயில் மருந்து செலுத்தும்  பணி நடந்துவந்துள்ளது. அப்போது எதிர்ப்பாரத விதமாக ஏற்பட்ட  வெடி விபத்தில் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது

கோவில்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து : உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் - முதல்வர் அறிவிப்பு..

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கொப்பம்பட்டியைச் சேர்ந்த திரு. குருசாமி ஈராச்சி அவர்களின் மகன் திரு. ராமர் மற்றும் திரு. பொய்யாமொழி அவர்களின் மகன் திரு. தங்கவேல்; தொட்டம்பட்டி, பசுவந்தனையைச் சேர்ந்த திரு. குட்டையன் அவர்களின் மகன் திரு. ஜெயராஜ்; நாலாட்டின்புதூரைச் சேர்ந்த திரு. வெள்ளச்சாமி அவர்களின் மகன் திரு. மாடமுத்து என்கிற கண்ணன் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

தன்னார்வலர்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தடை!

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் மூன்று இலட்சம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.