‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா சொன்ன தகவல்கள் இதோ..!!

 
அமுதா ஐ.ஏ.எஸ் அமுதா ஐ.ஏ.எஸ்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறிப்பு தமிழ்நாடு அரசின் செய்தித்தொடர்பாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான  அமுதா விளக்கம் அளித்துள்ளார். 

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பேசியதாவது: “

*மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அரசின் சேவைகளை கொண்டு செல்வதுதான் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் நோக்கம். 

*உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார். 

*உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் வரும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளார். இதனை அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தி உள்ளோம். 

 ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா சொன்ன தகவல்கள் இதோ..!!

*உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை காண விண்ணப்பங்களும் வழங்கப்படும் தகுதியானவர்கள் விடுபட்டு இருந்தால் விண்ணப்பங்களை பெற்று நிரப்பி கொடுக்க உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். 

*மக்கள் அதிகமாக கூடுகிற வசிக்கிற இடங்களில் முகாம்கள் நடத்த உள்ளோம். 

*மக்களுக்கு நாம் முகம் நடத்துவது தெரியப்படுத்த முகாம் நடத்துவதற்கு முன்பாக தன்னார்வலர்களை அனுப்பி சிறப்பு திட்ட முகாம் நடத்த உள்ளோம். இதற்காக ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

ஸ்டாலின்

*நகர்புற பகுதியளில் 3,768 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6,232 முகாம்களும் என நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 

*முன்பு 20 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு முகாம் இருந்தது இப்போது பத்தாயிரம் மக்கள் தொகைக்கு ஒரு முகாம் என முகாம்களின் எண்ணிக்கையை அப்படியே இரட்டிப்பாக்கி உள்ளோம். 

*மக்களின் குறைகளை கேட்டறிய 1100 என்ற எண்ணுடன் 100 பேர் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது.  

*கடந்த நான்கு ஆண்டுகளில் பெறப்பட்ட 1.05 கோடி கோரிக்கை மனுக்களில், கடந்த 30ம் தேதி வரை  1.01 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2,344 ஊரக முகாம்கள் மூலம் 95% தீர்வு காணப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.