"தமிழ்நாட்டு மாணவர்கள் அடித்து தூள் கிளப்புவார்கள்" - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!
மருத்துவம், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க செல்லும் 245 அரசுப்பள்ளி மாணவர்கள்; எட்டாக்கனியாய் இருந்த கல்வி இன்று அனைவருக்கும் கிட்டியுள்ளது;அரசு பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நல்ல கல்வி கிடைத்து உயர்கல்விக்கு செல்ல வேண்டும்;
ஐஐடியில் படிக்க இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 6 பேர் சென்றுள்ளனர்; ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்.
ஒரு காலத்தில் எட்டாக்கனியாக இருந்த கல்வியை இன்று எல்லோரும் பெற முடிகிறது என்றால் அதற்கு பின்னால் நம் முன்னோர்கள் நடத்திய எண்ணற்ற போராட்டங்கள் தான் காரணம். சிறிய ஊக்கமும் வழிகாட்டலும் இருந்தால் தமிழ்நாட்டு மாணவர்கள் அடித்து தூள் கிளப்பி விடுவீர்கள் " என்றார்.