ஸ்டெர்லைட் ஆலை- மாசுவை அகற்றி சீர் செய்வதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும்: ஐகோர்ட்

 
Highcourt

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் ஏற்பட்ட மாசுவை சீர் செய்வது தொடர்பான திட்டத்தை வகுக்கும்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவுத்துள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது : ஸ்டெர்லைட் சிஇஓ பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆலை மூடப்பட்டது.அரசின் இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது... இந்த நிலையில் அபாயகரமான கழிவுகள் ஆலை வளாகத்தில் தேங்கி கிடப்பதால் சுற்றுப்புற நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் பாத்திமா  கடந்த 2019- ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆலை மூட உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு வரும் பிப்ரவரி 13, 14ஆம் தேதிகளில் விசாரணை வரவுள்ளதாகவும், ஆலை மூடப்பட்டுள்ளதால் அந்தப்பகுதியில் மாசு ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள்,  ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்கான திட்டத்தை வகுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டு,  விசாரணையை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.