திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

 
student

சென்னையில் திருமண விழாவில் நடனமாடி கொண்டிருந்த கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: திருமண கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து  உயிரிழப்பு | Chennai college student fainted and died after dancing at a  wedding ceremony ...

ஆந்திர மாநிலம் அமீனா கேசவ நகரை சேர்ந்தவர் சத்யசாய் ரெட்டி(21). சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள பி.ஜி. ஹாஸ்டலில் நண்பர்களுடன் தங்கி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சவிதா இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு  (CSC)படித்து வந்துள்ளார். தனது தோழியான பூனம் என்பவரின் சகோதரியின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள வராகம் திருமண மண்டபத்திற்கு  நண்பர்களுடன் சென்றுள்ளார் சத்யசாய் ரெட்டி. அங்கு நண்பர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே சத்யசாய் ரெட்டியின் காதில் ரத்தம் வந்த நிலையில், கீழே மயங்கி  விழுந்தார்.

உடனடியாக அவரை திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நண்பர்கள் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சத்யசாய் ரெட்டி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த கோயம்பேடு பேருந்து நிலையம் போலீசார் சத்யசாய் ரெட்டியின் சடலத்தை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் திருமண நிகழ்ச்சி களையிழந்தது.