புறநகர் ரயில்கள் நாளை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் - தெற்கு ரயில்வே..

 
சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு..

மே தினத்தையொட்டி சென்னை புறநகர் ரயில்கள் நாளை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை மே தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி,  பொது விடுமுறை விடப்படுகிறது. இதனால்  சென்னை புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.  அத்துடன்,  சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையேயான ரயில் பாதையில் வேலை நடைபெறுவதாலும் புறநகர் ரயில் சேவையில்   நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

தெற்கு ரயில்வே

அதன்படி, பகல் 12.30 மற்றும் 12.50 மணிக்கு புறப்படும் கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில், சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், பிற்பகல் 1.50 மற்றும் 2.25 மணிக்கு செங்கல்பட்டு - கடற்கரை செல்லும் ரயில், சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.