எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த முறைகேடு வழக்கு தள்ளுபடி

 
supreme court

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில், அவர் நெஞ்சாலை துறை தொடர்பான டெண்டர் கோரியதில் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக திமுக குற்றம் சாட்டியது. 4800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதில், டெண்டர் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. 

ep

இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து அந்த வழக்கை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டம் எதை அனுமதிக்கிறதோ அதற்கு உட்பட்டு விசாரணை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.