"இனி டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தேர்வு கட்டாயம்” - தமிழக அரசு அரசாணை வெளியீடு

 
tn govt

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 100% அரசுப் பணி என்று  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட 2021 - 22 ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மை துறையின் மானிய கோரிக்கை தொடர்பான உரையின்போது, தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும், தமிழக இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு ,தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளும் தமிழ்மொழி பாடத்தாள்  தகுதி தேர்வு கட்டாயமாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் அரசுக்கு அளித்த கருத்துகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெரிவு முகமைகள்,  அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் அனைத்திலும் நியமன அலுவலர்கள் தேவைப்படும் நேர்வுகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளிலும் , தமிழ்மொழித் தாள் இணை தகுதித் தேர்வாக கட்டாயமாக்க அரசு ஆணை பிறப்பிக்கும் என்றார். 

m.k.stalin

இந்நிலையில் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு 100% அரசு பணி என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்மொழி தகுதி தாள் தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயம் ஆக்கப்படுகிறது.  தமிழ்மொழி தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது . அத்துடன் கட்டாய தமிழ்மொழி தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  தகுதித்தேர்வில் தகுதி தாளில் தேர்ச்சி பெறாதவர்களின்  இதர போட்டித் தேர்வு தாள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

stalin

அத்துடன் நடைமுறையில் உள்ள பொது தமிழ் ,பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலத் தாள்  நீக்கப்பட்டு பொது தமிழ் தாள்  மட்டுமே மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்படும். தமிழ்மொழி தேர்வானது பகுதியான கொள்குறி வகையில் 150 மதிப்பெண்களுக்கு தகுதித் தேர்வாக மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்  மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கை செய்யப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மேற்படி தமிழ்மொழித் தாள் கட்டாயம் ஆக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ,தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர் தேர்வு குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள இதர மக்களை பொறுத்தவரையில் கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் சம்பந்தப்பட்ட நிர்வாகத் துறைகளில் வெளியிடப்படும் . அத்துடன் தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்த வரையில் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் நிதி துறையால் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.