"லியோ” படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

 
டபுள் ஆக்சனில் விஜய்... லியோ பட ட்ரைலர் வெளியானது...

நடிகர் விஜய்யின் "லியோ” படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. 

லியோ பட புகைப்படங்கள் லீக்.... படக்குழு அதிர்ச்சி...

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

ஆயுத பூஜையை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19-ம் தேதி உலகம் முழுவதும் 'லியோ' திரைப்படம் வெளியாக உள்ளது. பண்டிகை காலம் என்பதால் அதிகாலை நான்கு மற்றும் ஏழு மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் மூலம் வருவாய் துறைக்கு  கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த அரசு தரப்பு, படம் வெளியாகும் நாளிலிருந்து தொடர் 5 நாட்களுக்கு ஒரே ஒரு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதி வழங்குவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அக்டோபர் 19 முதல் 24 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு ஒரு சிறப்புக் காட்சிகள் வீதம் நாள் ஒன்றுக்கு ஐந்து காட்சிகள் மட்டுமே  திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் திரையரங்குகள் தூய்மையாகவும் படத்திற்கு அதிகளவில் கூட்டம் வரும் என்பதால் ரசிகர்கள் உள்ளே சென்று வெளியே செல்ல சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதனை அந்தந்த பகுதி அதிகாரிகள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.