"சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த உத்தரவிடுக" - அன்புமணி வலியுறுத்தல்!!

 
tn

சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

anbumani ramadoss

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் "சமூகநீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு" கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், சுதந்திரமாகி 75 ஆண்டுகள் கடந்தும் சமூகநீதி நமக்கு கிடைக்கவில்லை. சமூகநீதியை பற்றி பேச திமுகவிற்கு துளியும் தகுதி இல்லை.  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் நாங்கள் சாலைக்கு வந்து கேள்விகளை வேறுவிதமாக கேட்க நேரிடும்.

tn

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை எனில், திமுகவை சமூக அநீதி கட்சி என மக்கள் பேசத் துவங்குவார்கள். எங்களுக்கு சாப்பாடு வேண்டும், பசி எடுக்கிறது. சாப்பாடு என்றால் என்ன சமூகநீதி. பின்தங்கிய மக்களுக்கு கல்வி மற்றும் உரிய வேலைவாய்ப்பு கிடைத்தால்தான் தமிழ்நாடு தானாக முன்னேறும். தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.