தமிழ்நாடு ஆளுநர் உரையை வாசிக்கவே இல்லை - அமைச்சர் சட்டத்துறை ரகுபதி

 
Ragupathi

தென் மாநில ஆளுநர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

tn

தமிழ்நாடு அரசின் இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது.  நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி  உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையானது ஆளுநரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை புரிந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். தமிழ்நாடு அரசின் உரையை முழுவதுமாக புறக்கணித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி.  தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரிக்கப்பட்டதாக கூறி அவர் உரையை படிக்காமல் அமர்ந்தார். வாழ்க தமிழ்நாடு,  வாழ்க பாரதம்,  ஜெய்ஹிந்த்,  ஜெய் பாரத் என குறிப்பிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார் ஆளுநர். இதை தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்து முடித்தார். இருப்பினும் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே பேரவையில் இருந்து ஆளுநர் ரவி  வெளியேறினார்.

ragupathi

இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கேரள ஆளுநர் 2 நிமிடம் உரையை வாசித்தார், தமிழ்நாடு ஆளுநர் உரையை வாசிக்கவே இல்லை தென் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது. தென் மாநில ஆளுநர்களின் நிலைப்பாடு ஆளும் மாநில அரசுகளுக்கு எதிராகவே உள்ளது. சாவர்க்கர் , கோட்சே குறித்து சபாநாயகர் அப்பாவு பேசிய குறிப்புகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும். ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் சுமூகமான போக்கை தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடைபிடித்து வருகிறார் என்றார்.