அதில் இந்தியாவின் தலைநகர் தமிழ்நாடு தான்.. நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.!! - மு.க.ஸ்டாலின்..

 
Stalin Stalin


மின்சார கார்கள்  உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதாகவும்,  இந்தியாவில் மின் வாகன உற்பத்தியின் தலைநகர் தமிழ்நாடு தான் என நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.  

தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.16,000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘வின்ஃபாஸ்ட்’ மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுக்கு வின்ஃபாஸ்ட் அதிகாரிகளை வரவேற்கிறேன். வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது முதலீட்டிற்காக தமிழ்நாட்டை தேர்வு செய்ததை பெருமையாக கருதுகிறேன். இந்த பெருமையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பெரும் பங்குண்டு.  

அதில் இந்தியாவின் தலைநகர் தமிழ்நாடு தான்.. நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.!! - மு.க.ஸ்டாலின்..

வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இந்தியாவின் மொத்த மின்சார கார்கள் உற்பத்தியில் தமிழ்நாட்டில் மட்டும் 40%.  மின்சார கார்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஒப்பந்தம் போடப்பட்ட 17 மாதங்களில் ஆலையில் உற்பத்தி தொடங்கி உள்ளது. எளிமையாக தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதற்கு இதுவே சான்று. 

இந்தியாவிலேயே தூத்துக்குடியில் தான் முழுமையான மின்சார கார் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது.  சென்னை , காஞ்சி, கோவை, ஓசூரை தொடர்ந்து மோட்டார்  வாகன தொழிற்கூடமாக தூத்துக்குடி உருவெடுக்கும்.  ஹூண்டாய், நிசான், டாடா , பி.எம்.டபிள்யூ ஓலா போன்ற நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியை தொடங்கின. கல்வி , மருத்துவம், தகவல் தொல்ழில்நுட்பத்திலும் வின்ஃபாஸ்ட் முதலீடு செய்ய வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.