குடும்ப அரசியல்தான்...பிரதமர் மோடிக்கு பயம் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!

 
MK Stalin

ஒரு நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார் மோடி என்று  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் திருமண விழாவில் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இப்போதெல்லாம் நல்லது செய்வதை கூட பயந்து செய்ய வேண்டி இருக்கிறது . நல்லதை கூட ஜாக்கிரதையாக, பொறுமையாக, பலமுறை யோசித்து செய்ய வேண்டியுள்ளது. வரலாறு நிறைய பேருக்கு புரியவில்லை: நாட்டின் பிரதமராக இருப்பவருக்கே வரலாறு தெரியவில்லை. திமுக என்பது குடும்ப இயக்கம் தான், தொண்டர்களை தம்பி என அழைத்தவர் அண்ணா. 

tn

திமுகவிற்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பம் மட்டும் தான் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் கூறியுள்ளார். ஆம் உண்மை தான்: கருணாநிதி குடும்பம் என்பதே தமிழ்நாடு தான். தமிழ்நாடும், தமிழர்களும் கருணாநிதியின் குடும்பம் தான். திமுகவினர் மாநாட்டிற்கு மட்டுமல்ல போராட்டத்திற்கும் குடும்பமாகத்தான் செல்வார்கள். வரலாறு நிறைய பேருக்கு புரியவில்லை; நாட்டின் பிரதமராக இருப்பவருக்கே வரலாறு தெரியவில்லை. ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதற்கட்ட கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. அதனால் ஏற்பட்ட அச்சம்தான் இறங்கி வந்து பேசும் நிலை மோடிக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.