தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது!!
Updated: Oct 9, 2023, 10:37 IST1696828027031
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது.
காவிரி விவகாரம் உள்பட பல்வேறு அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. காவிரி நீர் விவகாரம் குறித்து தனித் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.
இந்நிலையில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம், வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் ஆகியோர் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.